ஒரு சவரனுக்கு ரூ.472 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 472 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து நகைகள் வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் தங்க அணிகலன்களை அணிய அதிக ஆர்வம் காட்டுவர். மற்ற நாடுகளுக்கு தங்கம் என்பது ஒரு வகையான சேமிப்பு மட்டுமே,ஆனால் நம் நாட்டில் தான் தங்கத்தால் ஆன அணிகலன்கள் அணிவது ஒரு வகையான கலாசாரமாக உள்ளது. வீட்டு விசேஷங்கள் முதல் திருவிழா மற்றும் பண்டிகைகள் என அனைத்திற்கும் தங்க நகைகள் வாங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தங்கத்தின் விலை சந்தை நிலவரத்தை பொருத்தும் சுப முகூர்த்த நாட்களை பொருத்தும் விலை ஏற்றம் அடைகிறது.
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இந்த நிலையில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. நோய்த் தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தொழில் துறைகள் சரிவை சந்தித்தது. இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்பினர். அதனால் தங்கத்தின் விலை அதிகரித்தது. விலை அதிகரிப்பால் நகைப் பிரியர்கள் மற்றும் திருமணத்திற்கு நகைகள் வாங்க முற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். இதிலிருந்து மக்கள் மீண்டும் வர முடியாமல் இருந்து வந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவியது.
Exams Daily Mobile App Download
இந்த போரின் தாக்கத்தால் பங்கு சந்தை சரிவை நோக்கி சென்றது. மேலும் நாடுகளுக்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி பிரச்சனையால் பணவீக்கம் நிலவியது. இதனாலும் தங்கம் விலை அதிகரித்தது. இருப்பினும் தினசரி ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று ரூ. 472 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.38,296 க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் 4,787 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம் 64 ரூபாய் 80 பைசாவாக விற்பனையாகிறது.