தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் விளக்கம்!!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் விளக்கம்!!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் விளக்கம்!!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

முழு ஊரடங்கு?

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. ஆரம்பத்தில் மிக கடுமையாக பின்பற்றப்பட்ட விதிமுறைகள் காலப்போக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக முறையாக கடைபிடிக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்தொற்று உறுதியாகி வருகிறது. எனவே தமிழகத்திலும் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!

இந்நிலையில் அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் (ஏப்ரல் 10) அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்திக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 93 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். தினசரி 85 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மாநிலம் முழுவதும் 34 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது வரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!!

அரசு சார்பில் அனைவர்க்கும் முகக்கவசம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்தால் சுகாதாரத்துறையினர் உடன் ஆலோசனை நடத்தி கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் முதல்வர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!