தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அந்தந்த பள்ளிகளில் நடத்த ஆலோசனை!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக அவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் நடத்த அரசிடம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு மையங்கள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 21 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8.5 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு பணிகளை மேற்பார்வையிடும் அலுவலர்கள் அமைத்தல் போன்ற ஏற்பாடுகளை தேர்வு வாரியம் தயாரித்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து நூலகங்களையும் திறக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் அனுமதி மற்றும் ஒரு மேஜையில் 2 மாணவர்கள் மட்டும் அனுமதி மாணவர்களுக்கு இடையேயான சமூக இடைவெளி போன்றவற்றை அமல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்த அரசிடம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு – ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை!!
இதுகுறித்து தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் 3100 தேர்வு மையங்கள் இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக 6000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்னும் 2 மாதங்கள் உள்ளதால் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாமா? என ஆலோசனை கேட்கப்பட்டு முடிவு செய்யப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்