TNEB 600 உதவி பொறியாளர் பணியிடங்கள் – தேர்வு தேதியை மாற்ற பரிசீலனை!!
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணிகளுக்கான தேர்வுகள் மே 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை அன்று நடைபெறுவதால் அந்த தேதிகளில் மாற்றம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உதவி பொறியாளர் பணியிடங்கள்:
தமிழக மின்சார வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் 2020 ஆம் ஆண்டு நடத்தப்படவில்லை. 600 பணியிடங்களுக்கு 1 லட்சத்துக்கு அதிகமான இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் வேலை வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 24, 25 மற்றும் மே மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் என மின்சார வாரியம் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அறிவித்தது.
தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் – ஏப்ரல் 17 முதல் தொடக்கம்!!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதனால் அந்த நாட்களில் நடத்தப்படும் தேர்வுகள் நடக்குமா? என தேர்வர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதனால் மின்சார வாரியம் சார்பில் தேர்வு தேதியை மாற்றி அமைக்க பரிசீலித்து வருகிறது.
Iam inderst job tneb