தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – மே 2 காலை 8.30 மணிக்கு துவக்கம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி காலை துவங்கும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை:
தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமூகமாக நடைபெற்ற இந்த சட்டமன்ற தேர்தலில் 72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கைக்கான நாளும் தற்போது நெருங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு பத்தாயிரத்தை எட்டியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கும், வார இறுதியில் முழு முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் காரணமாக கண்டிப்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி துவங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கம் – SETC அறிவிப்பு!!
இது குறித்து அவர் கூறுகையில், ‘சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி காலை 8:30 மணிக்கு துவங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்’ என தெரிவித்துள்ளார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் இன்று மதியம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், காணொளி மூலம் பங்கேற்கும் அவர் வாக்கு எண்ணிக்கை குறித்த மேலும் சில தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.