தமிழகத்தில் மே 2ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை – தேர்தல் அதிகாரி தகவல்!!
தமிழகத்தில் மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது அதில் எந்த மாற்றமும் இல்லை என ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை :
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி கொரோனா பரவல் மத்தியில் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. தற்போதைய கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் தற்போதைய கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வருகின்ற மே 2 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதால் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன. அதனால் தேர்தல் ஆணையம் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 12,370 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் – ஏற்பாடுகள் தீவிரம்!!
மே 2ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் என்று வெளியான தகவல் உண்மை இல்லை என கூறினார். வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை. மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்