தமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு – டிஜிபி அறிக்கை!!

0
தமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு - டிஜிபி அறிக்கை!!
தமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுதமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு - டிஜிபி அறிக்கை!!வத்தினருக்கு அழைப்பு - டிஜிபி அறிக்கை!!
தமிழக தேர்தல் பணிகளில் முன்னாள் காவலர்கள், ராணுவத்தினருக்கு அழைப்பு – டிஜிபி அறிக்கை!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னால் காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிகள்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சியினரும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து அரசு அலுவலங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்தல் பணிகளில் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் இந்த தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் காவல்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், முன்னாள் இராணுவத்தினர், முன்னாள் தீயணைப்பு வீரர்கள், துணை ராணுவத்தினர், சிறைத்துறை காவலர்கள் ஈடுபடலாம்.

தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமல் – சுகாதாரத்துறை ஆலோசனை!!

இந்நிலையில் டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் அவர்கள் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணியாற்றலாம் அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம். மேலும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை பணியாற்றினால் அவர்களுக்கு அதற்கான ஊதியம் வழங்கப்படும்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 29, 30ம் தேதிகளில் விடுமுறை – அரசு அறிவிப்பு!!

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு அறையை 044-28449201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 30,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் கொரோனா அச்சம் காரணமாக இதில் கலந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அச்சமின்றி அவர்கள் பங்கேற்கலாம்”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!