தமிழக தேர்தல் முடிவுகள் 2021 – நள்ளிரவு 12 மணிக்குள் வெளியீடு!!
2021 தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்க இருக்கும் நிலையில் முடிவுகள் அனைத்தும் இரவு 12 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள்:
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சட்டமன்ற தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு DSSC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – 83 காலிப்பணியிடங்கள்
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று வரை மொத்தம் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த முறையை விட இது அதிக அளவு ஆகும் என்று தெரிவித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்றினால் இதுவரை 6 தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிக வாக்குகள் பதிவு காரணமாகவும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்க தாமதம் ஆகலாம். எவ்வாறாக இருப்பினும் நாளை நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.