தமிழகத்தில் எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதல்வர் முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிய இருக்கும் நிலையில், தேர்தல் வாக்குறுதியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
முதல்வர் அறிவிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் பேசுகையில், தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மக்களால் உருவாக்கப்பட்டது , மேலும் திமுக அரசு அளித்த பெருபான்மையான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல மற்ற வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களின் முக்கிய கோரிக்கை – கூட்டுறவு சங்கம் இன்று பேச்சு வார்த்தை!
மேலும் அவர் திமுக அரசு ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டை அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்ட பின் தான் தாக்கல் செய்கிறது. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியதும் எங்களுடைய பணி முடிந்துவிட்டது என இருக்காமல், அந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு சென்றடைந்து இருக்கிறது என ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து இருக்கிறோம். மேலும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சர்கள் குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்பு மற்றும் கோரிக்கைகளை கேட்டு இருப்பதாகவும், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒருவாரத்தில் நிவாரண தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார் .
Exams Daily Mobile App Download