தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜாக்டோ ஜியோ வெளியீடு!!
தமிழக சட்டமன்ற தேர்தலில் தபால் முறையில் வாக்களிக்க உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை ஜாக்டோ ஜியோ வெளியிட்டு உள்ளது.
ஆசிரியர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினரும், தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னணி அரசியல் கட்சியினரும் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து பள்ளிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்தல் நடைபெறும் போது செய்ய வேண்டிய பணிகள் பிரிக்கப்பட்டு அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுவரை இரண்டு கட்ட பயிற்சி முடிந்து மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை நடைபெற உள்ளது.
தமிழக தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தேர்தல் பணிக்கான பயிற்சியின் போது தபால் முறையை வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது தபால் முறை வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பை ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ளது. அதில், “தபால் வாக்குகள் பெற போதிய கால அவகாசம் உள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசரப்பட வேண்டாம்.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு – நாளை வெளியீடு!!
அவ்வாறு அவசரம் காட்டினால் அதில் எதாவது தவறுகள் ஏற்பட்டு செல்லாமல் போகும் நிலை உள்ளது. தபால் வாக்களிக்க மே மாதம் 2 ஆம் தேதி காலை 8 மணி வரை நேரம் உள்ளதால் அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் அவசரம் இல்லாமல் வாக்களிக்க வேண்டும்”, தெரிவிக்கப்பட்டுள்ளது.