தமிழக சட்டமன்ற தேர்தல் தபால் வாக்குப்பதிவு – 2.44 லட்சம் பேர் விண்ணப்பம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தபால் முறை மூலமாக விண்ணப்பிக்க 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தபால் முறை வாக்களிப்பு:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் நேரடியாக வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் தபால் முறை மூலமாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் போன்றோர் தபால் முறையில் வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த ஆண்டு கொரோனா காரணமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எளிதாக கொரோனா பரவும் என்பதால் அவர்களுக்கும் தபால் முறையில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தபால் முறையில் வாக்களிப்பதற்கான 12டி படிவம் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் வாக்குச்சாவடிகளில் வழங்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் அறிவித்து 5 நாட்களுக்குள் இந்த படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஏப்ரல் 5 வரை மருத்துவர்களுக்கு விடுமுறை ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!
தற்போது வரை தபால் முறையில் வாக்களிக்க 2,44,922 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களின் தகுதியை தேர்தல் நிலை அலுவலர்கள் ஆராய்ந்து வருகின்றனர். விவரங்கள் தெளிவாக உள்ள வாக்காளர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.
வீட்டில் இருந்தே வேலை – 29 சதவீத ஊழியர்கள் விருப்பம்!!
இதுவரை விண்ணப்பித்தவர்களில் காவல்துறையினர் 2,770 பேரும், தேர்தல் பணி அரசு ஊழியர்கள் 33,189 பேரும், மாற்றுத்திறனாளிகள் 49,114 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,59,849 பேரும், களப்பணியாளர்கள் 35 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.