தமிழக சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு – இன்று வெளியீடு!
மேற்கு வங்காளத்தில் இன்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாக உள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் கருத்து கணிப்பு:
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைப்பெற்றது. கொரோனா இரண்டாம் அலையில் தொற்று அதிகமாக பரவி வந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்து தேர்தலை நடத்தியது. கட்சி வேட்பாளர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
இதனை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததால் 8ம் கட்ட தேர்தலானது இன்றுடன் முடிவடையவுள்ளது. எப்போதும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு அதன் கருத்து கணிப்பு வெளியிடப்படுவது வழக்கம் ஆனால் மேற்கு வங்கத்தில் தேர்தல் தற்போது தான் முடிவடையவுள்ள நிலையில் மற்ற மாநிலங்களின் தேர்தல் கருத்து கணிப்புகளும் அறிவிக்கப்படவில்லை.
முழு ஊரடங்கு உத்தரவிற்கு வாய்ப்பில்லை – மாநில முதல்வர் தகவல்!!
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தில் இன்று மாலை 6.30 மணியுடன் முடிவடையவுள்ளது. எனவே அம்மாநிலத்தையும் சேர்த்து 5 மாநிலங்களின் வாக்குப்பதிவு கருத்துக் கணிப்பு மேற்கு வங்கத்தில் வாக்கு பதிவு நடைப்பெற்ற ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதாவது இரவு 7.30 மணிக்கு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்