தமிழகத்தில் MBBS படிப்புகளுக்கு SEET தேர்வு – கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை!!
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் SEET தேர்வு நடத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், பிரச்சார வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களை கவரம் நோக்கில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இம்முறை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அவர்களும் போட்டியிட உள்ளார். தற்போது அவர் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழக பள்ளிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – 2.75 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை!!
விவசாயம், தொழில், உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 15-20% வளர்ச்சியை உறுதி செய்து ரூ.60-70 லட்சம் கோடியாக உயர்த்துவோம். தனிநபர் வருமானம் 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். நீலப் புரட்சி – நதிநீர் இணைப்பு, அதிதிறன் நீர்வழிச்சாலை, நீர்நிலை மேம்பாடு மற்றும் தண்ணீர் மேலாண்மை மூலம் அனைவர்க்கும் சுத்தமான குடிநீர்.
TN Job “FB Group” Join Now
அரசு பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்பாடு, அடிப்படை கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக்கல்வி 9-10 வரை சீர்திருத்தம், மாணவர்களின் படிப்பு சுமை குறைப்பு. 1.3 கோடி பேருக்கு உலகத்தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு. தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் MBBS படிப்பிற்கு SEET தேர்வு. அனைவர்க்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், தரமான அரசு மருத்துவ கல்லூரி, உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.