தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் – நாளை தொடக்கம்!!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் வேட்பு மனு தாக்கல் நாளை (மார்ச் 11) வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் தேர்தலில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளும், புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதியும் உள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து அரசு அலுவலகங்களும் வந்தன. தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மார்ச் மாதம் 19 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தினமும் காலை 10 முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – குடியரசு தலைவர் பங்கேற்பு!!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தாக்கம் நடைபெறுவதால் வேட்புமனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்களுடன் இருவர் மட்டுமே வர வேண்டும். பேரணியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய கூடாது போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. புதுச்சேரியிலும் கூட்டணி தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகள் போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகிறது.