சட்டமன்ற தேர்தல் பயிற்சி வகுப்பு – தபால் ஓட்டுப்படிவம் வழங்க கோரிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பின் போதே தபால் முறை வாக்குப்பதிவிற்கான 12டி படிவத்தை வழங்க வேண்டும் என உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, தேர்தல் வேட்பாளர் மனு தாக்கல் செய்வது என அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 12 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 4 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் அரசு பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – தலைமை ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு!!
இந்நிலையில் அவர்களுக்கு தபால் மூலமாக வாக்களிக்க 12டி படிவங்களை முதல் கட்ட பயிற்சி வகுப்பின் போதே வழங்க வேண்டும் எனவும், தேர்தல் பணி நியமன கடிதம், வாக்காளர் அடையாள அட்டை நகலை படிவத்துடன் இணைத்து தேர்தல் அலுவலரிடம் கொடுக்க முதல் பயிற்சியின் போது ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திருத்தப்பட்ட அட்டவணை – மாநில அரசு வெளியீடு!!
கடந்த ஆண்டு இவ்வாறு செய்யாமல் 65 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓட்டுகள் வீணாக்கப்பட்டது. இந்த ஆண்டும் அவ்வாறு செய்யாமல் அரசு ஊழியர்களும் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதல் தேர்தல் பயிற்சியின் போது படிவத்தை வழங்கவும் இரண்டாவது பயிற்சியின் போது தபால் முறையில் வாக்களிக்க கெஜட் அலுவலரை நியமிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.