தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணி ஆணை – ஏப்ரல் 4ம் தேதி வழங்கல்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான உரிய ஆணைகள் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி (நாளை) வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் முன்னாள் படைவீரர்களும், காவல்துறையினரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திரபானு ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில், “சட்டமன்ற தேர்தலில் முன்னாள் படைவீரர்கள், காவல்துறையினர் பங்கேற்க காவல்துறை, முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மற்றும் சிஎஸ்டி கேண்டீன் போன்ற இடங்களில் ஏற்கனவே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
இதில் விண்ணப்பித்த படைவீரர்கள் அனைவரும் நாளை காலை 7 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பணிபுரிவதற்கு உரிய ஆணையை பெற வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 04343-236134, 96778-60489 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.