தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பூத் ஏஜென்ட் பணி – மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தல்!!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஆசிரியர்கள் பூத் ஏஜென்ட் பணிகளை ஏற்கக்கூடாது என மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 6) நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சார பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் அவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
மே மாதம் 2 ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தபால் வாக்குகள் செலுத்த மே 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடிகளில் செய்ய வேண்டிய பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சில அரசு ஆசிரியர்கள் தபால் வாக்குகள் குறித்து முகநூலில் புகைப்படம் வெளியிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஏஐசிடிஇ வெளியீடு!!
மேலும் அவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியினருக்கும் ஆதரவாக இருக்கக் கூடாது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதனை மீறி அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக இருக்கும் ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கக்கூடும் என எச்சரித்தனர். ஆனால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் ‘பூத் ஏஜென்ட்’ பணிகளில் ஈடுபட உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!
இதற்கு மாவட்ட ரீதியாக ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், “ஆசிரியர்கள் எந்த அரசியல் கட்சியை சார்ந்து செயல்படக் கூடாது மற்றும் பூத் ஏஜென்ட் போன்ற கட்சி சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும், அவ்வாறு மீறி செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளனர்.