தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குப்பதிவு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து மொத்தம் 72.78% சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரத சாஹு தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழக மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடைமையை கொரோனா விதிகளை பின்பற்றி வாக்களித்தனர். முன்னணி நடிகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனா காலகட்டத்தில் கூட வாக்களிக்க வந்தனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்க வழக்கத்தை விட அதிகமாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவில் 72.78% சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 9 முதல் மருத்துவமனைகளில் முன்பதிவு கட்டாயம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதுவரை வாக்குப்பெட்டிகள் அரசு கல்லூரிகளில் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.