தமிழகத்தில் தேர்தல் நாளில் விடுமுறை – தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் தேர்தல் நாளில் விடுமுறை - தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை!!
தமிழகத்தில் தேர்தல் நாளில் விடுமுறை - தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை!!
தமிழகத்தில் தேர்தல் நாளில் விடுமுறை – தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை!!

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அன்று அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும், அவ்வாறு விடுமுறை அளிக்காவிட்டால் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் ஆணையர் எச்சரித்துள்ளார்.

தொழிலாளர் ஆணையர் அறிவிப்பு:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுப்பட உள்ளனர். தேர்தலில் 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் தெரிவிக்கிறது. இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நாளன்று 951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135 (பி)-ன் கீழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி,

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் உள்ள வர்த்தக தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகளும், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் போன்றவைகளும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் போன்றோர்களுக்கு தேர்தல் நாள் அன்று விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நாளை வாக்களிக்க ஏதுவாக விடுமுறை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட வேண்டும். மேலும் அதனை மீறி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் உள்ள தொழில் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நாளை வணிக நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்!!

இது குறித்த புகார்களை மாநில, மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலையளிப்பவர்கள் தேர்தல் நாளன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் அல்லது தொழிலாளர்கள் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!