தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? விரைவில் அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
+2 பொதுத்தேர்வு:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய +2 பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி துவங்கி மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு முடிந்தது. இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட +2 பொதுத்தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரண்டு நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – யுஜிசி வெளியீடு!!
இதன் படி, நேற்று கல்வி உயரதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலம் இதில் அடங்கியிருப்பதால் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தாமல், ஆல்பாஸ் வழங்கலாம் எனவும் பேசப்பட்டுள்ளது. +2 பொதுத்தேர்வு மாணவர்களின் எதிர்கால கல்விக்கு முக்கியம் என்பதால், அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க வேண்டும் எனவும் கல்வி உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தவிர தற்போதுள்ள சூழலில் மாணவர்களை ஒரே இடத்தில் சேர்ப்பது என்பது கூடாத காரியம்.
TN Job “FB Group” Join Now
அவர்களில் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட அது மற்ற எல்லோரையும் பாதிக்கும் என்பதால் தேர்வுகளை நடத்தாமல் ஆல்பாஸ் அறிவிக்கலாம் என ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஒரு வேலை மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறும்போது, ‘இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையையும், கருத்துக்களையும் கல்வி உயரதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். தேர்வுகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார்’ என தெரிவித்துள்ளார்.