ஊரடங்கில் கல்விக்கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் அனைத்து நுழைவுத் தேர்வுகள், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.
கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது:
கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாததால் பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனமும் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
LKG இலவச சேர்க்கை ஒத்திவைப்பு
இதை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |