தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சாதி அடையாள கயிறு தொடர்பாக இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் மாணவர் ஒருவர் பலியாகி உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இதனை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளின் தலைமையாசியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாணவர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த செல்வ சூர்யா என்ற மாணவருக்கும் 11ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவருக்கும் இடையில் சாதிக்கயிறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மேலும் சில மாணவர்களும் இணைந்து வாக்குவாதம் அடிதடியாக மாறி கலவரமாக வெடித்தது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
இதில் செல்வ சூரியா என்ற மாணவன் கல்லால் அடிபட்டு காதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அதன்பின் தலைவலி காரணமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இதில் செல்லும் வழியில் மாணவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போல அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் சமூக நல்லிணக்கம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படும் சாதி கயிறுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Exams Daily Mobile App Download
மேலும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து பள்ளிகளின் தலைமையாசியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் கயிறுகளை அணிய கூடாது என்றும் சாதி பிரிவினையை தூண்டுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை எச்சரிக்கை வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமையாசியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.