தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கும் அளவுக்கு பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. எனவே கோடை வெப்பத்தை காரணமாக கொண்டு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம், தேர்வுகளுக்கு மட்டும் வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழக மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்தனர். இந்த கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறை மேற்கொண்டு வந்தது. இதை தொடர்ந்து கொரோனாவை முழுமையாக ஒழித்து, அதிலிருந்து பொதுமக்களை பாத்துக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அனைத்து நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தலைதூக்கிய கொரோனா 3ம் அலை கடந்த ஜனவரி மாதத்தில் படிப்படியாக ஓய்ந்ததால் அனைத்து கல்வி நிறுவனங்களும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – மானியம் குறித்த அப்டேட்!
இதை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சில வாரங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. பள்ளிகளில் வேலை நாட்கள் குறைவாக இருப்பதால் விரைவில் பாடத்திட்டங்களை முடிக்க ஆசிரியர்கள் அதிக ஆர்வம் காட்டினார். இந்த பொதுத்தேர்வு கால அட்டவணை படி, நாளை முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளன. அதே போல், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரையும் 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. மேலும் தேர்வர்கள், ஆசிரியர் என அனைவரும் தேர்வு மையத்தில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை கோடை வெப்பம் வாட்டி வதைப்பது இயல்பு. குறிப்பாக மே மாதம் சூரியன் அதிகபட்ச சூட்டை இந்திய துணை கண்டத்தின் மீது இறக்கிவிடும். இதற்காகவே பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், இம்முறை ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், அவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்விதுறை தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தால் மட்டும் போதும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மற்ற நாட்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.