தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள ஆசிரியர்கள் மே 20ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஆன்லைன் மற்றும் அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதனால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியதும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது.
ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – டிக்கெட்டில் இதை கவனத்திருக்கிறீர்களா?
தற்போது கால அட்டவணையின் படி தற்போது 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மே 31ம் தேதி வரை தொடர்ந்து தேர்வு நடைபெறும். 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதியுடன் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்துள்ளது. இதனையடுத்து மே 14 முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஜூன் 13ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வருகை புரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கடுத்த பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் மே 20ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் வரும் 20ம் தேதிக்கு முன்பாக மதிப்பீடு பணிகளை முடித்து விட்டால் அப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. அதுமட்டுமின்றி வெளிநாடு செல்ல தடையின்மை சான்று பெற்ற ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளை முடித்த பிறகு செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.