தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் – தலைநகரில் போராட்டம்!!

0
தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் - தலைநகரில் போராட்டம்!!
தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் - தலைநகரில் போராட்டம்!!
தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் – தலைநகரில் போராட்டம்!!

தமிழக மின்சார வாரியம் சார்பில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான பணி நியமன ஆணை வழங்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கேங்மேன் பணியிடங்கள்:

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான தேர்வுகளும் நடத்தப்பட்டு முடிந்தன. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அந்த வழக்கு விசாரணையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் 9,613 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று பணியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய கல்வியாண்டு முதல் கட்டாயக்கல்வி சட்டம் – பெற்றோர்கள் கோரிக்கை!!

ஆனால் அதில் இன்னும் பலருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அதனால் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகம் அருகே கேங்மேன் பணி நியமன ஆணை வழங்கக்கோரி தேர்வானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!