தமிழகத்தில் இ-சேவை மையங்கள் செயல்பட அரசு அனுமதி – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற 21 ஆம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய தளர்வாக நாளை முதல் (ஜூன் 14) இ-சேவை மையங்கள் இயங்க தமிழக அரசு அனுமதிக்கு வழங்கியுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள்:
தமிழகத்தில் நாளை (ஜூன் 14) காலை முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை 21 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்றவாறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் 27 மாவட்டங்களுக்கு அதிக அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது மேலும் சில புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் அனைத்தும் பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களுக்கு பொருந்தாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் இ-சேவை மையம் செய்லபடும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டீ கடைகளை திறக்க அரசு அனுமதி – முதல்வர் உத்தரவு!
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது, பொது மக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் நாளை (ஜூன் 14) முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-சேவை மையங்களுக்கு செல்லும் மக்கள் அனைவரும் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.