தமிழக அரசின் இறப்பு பதிவு முறையில் மாற்றங்கள் – எம்பி கோரிக்கை!
தமிழகத்தில் தற்போது கொரோனா பேரிடர் காலம் நிலவுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனை பதிவு செய்யும் முறையை மாற்றியமைக்குமாறு மதுரை எம்.பி. வெங்கடேசன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இறப்பு பதிவு முறை:
கொரோனா நோய் தொற்றால் நாடு முழுவதும் ஏராளமான இறப்புகள் நிகழ்கிறது. கடந்த ஒரு வருடங்களாக பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் மற்றும் சாதாரண மரணங்களின் விகிதமும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 493 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
காலை 6 மணிமுதல் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
மேலும் தமிழகத்தில் ஒருவர் இறந்தால் அவர் இறந்து 21 நாட்களுள் அதை பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. பதிவு செய்தவுடன் இறப்பு சான்றிதழ் குடும்ப உறுப்பினர் கைகளில் வந்து சேரும். அவ்வாறு பதிய தவறினால் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பதிவதற்கு நீதிமன்றத்தை நாடும் நிலை வரும். தற்போது கொரோனா சூழலில் இறப்பை பதிவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கால் அலுவலகங்களில் பாதி அலுவலர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இறப்புகள் அதிகமாக உள்ளது. இறப்பினை பதிவதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. மண்டல அலுவலகத்திற்கும், வார்டு அலுவலகத்திற்கும் மக்கள் கண்ணீரோடு அலைந்து திரிகின்றனர். இதனால் அவர்களுக்கு கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. எனவே இந்த பேரிடர் காலத்தில் இறப்பு பதியும் முறையில் சில திருத்தங்களை முதல்வர் கொண்டு வர வேண்டும் என மதுரை எம்பி வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.