தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணிக்கு திறப்பு? அரசு திட்டம்!

1
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணிக்கு திறப்பு? அரசு திட்டம்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணிக்கு திறப்பு? அரசு திட்டம்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணிக்கு திறப்பு? அரசு திட்டம்!

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் நேர கட்டுப்பாடுகள் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்குதலும், அதனால் ஏற்படும் இழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மே 6ம் தேதியான நாளை முதல் மாநிலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே 12 மணி வரை செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கான விதிமுறைகள் ஏதும் குறிப்பிடவில்லை.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவு – சென்செக்ஸ் புள்ளிகள் 400க்கு மேல் உயர்வு!!

இதனால் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகின்றது. இதனால் நீதிமன்றத்தில் மதுபான கடைகளுக்கான விதிமுறைகள் குறித்து வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபான கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் ஆந்திராவை போல் தமிழகத்திலும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது என்றும், இது தொடர்பான அதிகார்பூர்வ அறிவிப்பு இன்று எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தமிழக தலைமை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஆக மொத்தம் மது கடைய மூட மாட்டீங்க
    ரொம்ப நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!