தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் மெட்ரோ ரயில் இயக்கம் – நிர்வாகம் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக வார இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கின் போது மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்குடன் கூடிய வார இறுதியில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் திரையரங்குகள், உணவகங்கள், மால்கள், சுற்றுலா தலங்கள், மதவழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர வார இறுதியில் ஊரடங்கின் போது அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
TNPSC Half Yearly Exam Hall Ticket 2021 (Out) – Download Exam Date
இந்நிலையில் மே மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்று கிழமைகளில் மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மெட்ரோ பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே ரயிலில் பயணிக்க முடியும். மே மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் காலை 7 மணி முதல் 8 இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும்.
TN Job “FB Group” Join Now
மெட்ரோ விம்ரோ நகர் துவங்கி சென்னை விமான நிலையம் வரை 1 மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில் இயக்கப்படும். மெட்ரோ சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும். தொடர்ந்து சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை வரை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும். அதன் படி ஞாயிற்று கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.