தமிழக மாவட்டங்களில் 14 நாட்கள் முழு ஊரடங்கு? கொரோனா பாதிப்பு எதிரொலி!!
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் கோவை மாநகரில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை எட்டியுள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
பொது முடக்கம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 16 ஆயிரம் வரை நோய் பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. பலி எண்ணிக்கையும் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற மாநகராட்சி பகுதிகளில் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் அங்கு 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அண்ணா பல்கலை மறுதேர்வுகள் ஒத்திவைப்பு – அறிவிப்பு வெளியீடு!!
கோவை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு 143 ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து வந்த பாதிப்பு கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி 888 ஆக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று ஏப்ரல் 29 ஆம் தேதி 900 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு வரும் நாட்களில் ஆயிரத்தை எட்டும் என்ற அச்சம் நிலவி வருகிறது. கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்பவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு கூறுகிறது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து கோவை மாவட்ட மருத்துவர்கள் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் தொற்று பரவலை ஓரளவு மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இதை கட்டுப்படுத்த வேண்டுமானால் 14 நாட்கள் பொது முடக்கம் கண்டிப்பாக அவசியம். இந்த 14 நாட்கள் ஊரடங்கில் தொற்று பாதிப்பை சற்று குறைக்க முடியும். அதன்பின் ஒரு வாரம் ஊரடங்கை தளர்த்தி விட்டு தொற்று பாதிப்பு மீண்டுமாக பரவுமா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பிறகு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தி தொற்றை தவிர்க்க வேண்டும்.
மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
இல்லையென்றால், நிலைமை எல்லை மீறி சென்று விடும்’ என தெரிவித்துள்ளனர். தவிர மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் கூறுகையில், ‘நோய் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் பங்களிப்பு முக்கியம். பொது ஊரடங்கு அமல்படுத்தினாலும் சுய கட்டுப்பாடு அவசியம். கோவை மாநகராட்சியில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நோய் பரவலுக்கு முன்னதாகவே பொது ஊரடங்கை அமல்படுத்தியிருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்