தமிழகத்தில் மேலும் 2 கொரோனா பரிசோதனை ‌மையங்கள் – அமைச்சர் தகவல்

0
தமிழகத்தில் மேலும் 2 கொரோனா பரிசோதனை ‌மையங்கள் - அமைச்சர் தகவல்
தமிழகத்தில் மேலும் 2 கொரோனா பரிசோதனை ‌மையங்கள் - அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மேலும் 2 கொரோனா பரிசோதனை ‌மையங்கள் – அமைச்சர் தகவல்

சீனாவிலிருந்து பரவிய கொரோனா என்னும் வைரஸ் உலக நாட்டு மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் இந்த வைரஸ் பாதிப்பினால் 3100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மற்றும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 இலட்சத்துக்கும் அதிகமாகி அச்சுறுத்துகிறது.இதை தடுப்பதற்காக தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவை, அரசு பரிசோதனை மையங்களில் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, சேலத்தில் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும், 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 7 ஆக அதிகரித்துள்ளது.

சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல்

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று 20.03.2020 தன் ட்விட்டர் பக்கத்தில், ”தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் குறித்து பரிசோதிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!