தமிழகத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி – 900ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

0
தமிழகத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி – 900ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 இல் இருந்து 911 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்:

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 77 பேரில் 5 பேர் வெளிநாடு மற்றும் மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து மீதமுள்ள 72 பேருக்கு பரவியதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

மே 1 வரை ஊரடங்கை நீட்டித்த மாநிலம் – கொரோனா நடவடிக்கை தீவிரம்..!

இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 77ல் 71 பேர் தீவிர நுரையீரல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் அவர்கள் பிரதமர் உடன் ஆலோசித்து தெரிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5 நகரங்களுக்கு ரெட் அலர்ட்.! மத்திய அரசு அதிரடி.!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!