தமிழகத்தில் ஒரே நாளில் 121 பேருக்கு தொற்று உறுதி..!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,058 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
- தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2058 பேர்
- இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை – 25 பேர் (1.21%)
- வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 30,692 பேர்
- அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 47 பேர்
தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1128 (54.80%) ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 902 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கும், செங்கல்பட்டில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும், நாமக்கல்லில் 2 பேருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 32 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:
- சென்னை – 673 பேர்
- கோவை – 141 பேர்
- திருப்பூர் – 112 பேர்
- திண்டுக்கல் – 80 பேர்
- ஈரோடு – 70 பேர்
- மதுரை – 79 பேர்
- நெல்லை – 63 பேர்
- செங்கல்பட்டு – 70 பேர்
- நாமக்கல் – 59 பேர்
- திருச்சி – 51 பேர்
- திருவள்ளூர் – 53 பேர்
- தேனி – 43 பேர்
- நாகை – 44 பேர்
- கரூர் – 42 பேர்
- ராணிப்பேட்டை – 39 பேர்
- கள்ளக்குறிச்சி – 9 பேர்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |