தமிழகத்திற்கு 1. 50 கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அரசு மருத்துவ பணிகள் கழகத்திற்கு ஆணை வெளியிட்டுள்ளது. மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கலந்துரையாடல்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அறிவித்து வருகின்றன. மேலும் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி மற்றும் உயிர்காக்கும் ஆக்சிஜன் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக 1.50 கோடி தடுப்பூசிகள் மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி தொலைக்காட்சி பாடங்கள்!!
ஏற்கனவே இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. இதுவரை 55.51 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு மருத்துவ கழகத்திற்கு ஆணையிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்