தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – DEO உத்தரவு!!
திருச்சி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏப்ரல் 16, 17 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் ஆசிகரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 16, 17 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள திருச்சி, லால்குடி, முசிறி, மணப்பாறை போன்ற கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
TNPSC AAO தேர்வுகள் ஒத்திவைப்பு – எம்.பி கோரிக்கை!!
அந்த பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு இந்த முகாம் நடத்தப்படுகின்றன. எனவே அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் தெரிவித்துள்ளார்.