தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களும் தடுப்பூசி போடும் பணிகள் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா தொற்று நோயை தடுக்கும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடும் பணிகள்:
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் மக்களுக்கு பெரும் உடல்நல சேதத்தையும், பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் பல கொரோனா நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரஸை தடுக்கும் தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியை தயாரித்து வெற்றி அடைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி!!
கோவாக்ஸின் தடுப்பூசி இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் போடப்பட்டு தற்போது தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வாரத்தில் 7 நாட்கள் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விற்கு நீக்கப்பட்ட பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படாது – மத்திய கல்வி அமைச்சர் தகவல்!!
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “மத்திய அரசு, சுகாதார பணிகள் பாதிக்காத வகையில் ஒருநாள் விட்டு ஒருநாள் தடுப்பூசி போடும் பணியை செய்ய அறிவுறுத்தியது. ஆனால் தமிழக அரசு வாரத்தில் 7 நாட்களும் தடுப்பூசி போடும் பணியை செய்ய உத்தரவிட்டுள்ளது. ஒரு தடுப்பூசி பெட்டியில் 10 பேருக்கு மட்டுமே மருந்து இருக்கும். சில நேரத்தில் 10 பேர் இல்லாத நிலையில் மீதமுள்ள மருந்துகள் பயனற்று போய்விடும். அதனால் தான் வாரம் முழுவதும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தடுப்பூசி போட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்