தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 945 பேருக்கு கொரோனா உறுதி – 8 பேர் பலி!!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது சில விதிகளுடன் பின்பற்றப்படுகிறது. தற்போது 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு, பிரச்சாரம் என பலவற்றுக்கு மத்தியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,62,374 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்து உள்ளதால், பலி எண்ணிக்கை 12,564 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 576 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 8,43,999 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இன்று அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 1 மாதத்திற்கு மேலாக தினசரி தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த நிலையில், மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழக தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி மீண்டும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுமோ? என்கிற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்