நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!

0
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை (ஏப்ரல் 14) அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.61 லட்சமாக பதிவாகி உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார். கடந்த 5 ஆம் தேதி பலதுறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்காணிப்பு – 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

அதன் பின்னர் கடந்த 8 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி தற்போது அனைத்து மாநில கவர்னர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை (ஏப்ரல் 14) நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்படுத்தும் நடவடிக்கைகளை பற்றி ஆலோசனை நடத்தப்படும் மேலும் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதுமட்டுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!