முகக்கவசம் அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதி – நகராட்சி அறிவிப்பு!!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சியில் முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என காங்கயம் நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு எச்சரிக்கை:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனால் மக்கள் அதனை சரியாக பின்பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது. பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சியில் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள், இல்லையென்றால் சம்மந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என காங்கயம் நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
TNEB Assistant Engineer தேர்வுகள் ஒத்திவைப்பு – TANGEDCO அறிவிப்பு!!
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் மூர்த்தி கூறுகையில், “காங்கயம் நகராட்சியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள தனியார் வணிக நிறுவனங்களுக்கு செல்லுவோர் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், மேலும் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை – ஆய்வில் தகவல்!!
அவ்வாறு மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். காங்கயம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அவ்வாறு வராதவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்