தமிழகத்தில் மே 15 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 – கூட்டுறவுத்துறை தகவல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 15 ஆம் தேதி முதல் கொரோனா நிவாரண நிதியான ரூ.2000 அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து பலனளிக்காத நிலையில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். எனவே புதிதாக தலைமை ஏற்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 15 முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் பதில்!!
அதற்கான முதல் தவணை தொகையான ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படும் என அவர் அறிவித்தார். அதன்படி இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இன்று முதல் தமிழகத்தில் உள்ள 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் மே 15 ஆம் தேதி முதல் மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ள டோக்கன் எண் அடிப்படையில் சென்று தங்களது கொரோனா நிவாரண தொகையை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு சார்பில் ரூ.4,153.39 கோடி செலவில் மே மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணமாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது. மே மாதம் 10 ஆம் தேதி முதல் மே 12 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வீடு தேடி வந்து டோக்கன் வழங்கப்படும். மக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் வந்து தங்களது தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
Super.