தமிழகத்தில் முழு ஊரடங்கு அச்சம் – பாரம்பரிய விளையாட்டு பொருள்கள் வியாபாரம் தீவிரம்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதால் பாரம்பரிய விளையாட்டு பொருள்களை வாங்கி வியாபாரிகள் குவித்துள்ளனர்.
பாரம்பரிய விளையாட்டு பொருள்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். பொழுது போக்கிற்கு வெளி இடங்களுக்கு செல்ல முடியாத நிலை காரணமாக நமது பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம், தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், சீட்டாட்டம், செஸ் போர்டு, கேரம் போர்டு, பட்டம் என மக்கள் பொழுதை போக்கி வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு மீண்டும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் பாரம்பரிய விளையாட்டு பொருள்களை வியாபாரிகள் வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் புத்துணர்வு அளிக்கும் படி இருந்தது.
கொரோனா பரவல் எதிரொலியாக கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டு பொருள்களை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். இந்த பொருள்கள் தயாரிக்கும் சிவகாசி, சென்னை, சேலம் போன்ற நகரங்களில் இந்த தொழில் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளது.