தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – முதல்வர் சொல்வது என்ன?
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மே 24ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிக்கும் நிலை வராது என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொடக்கத்தில் கடுமையாக பின்பற்றப்பட்ட விதிமுறைகள் காலப்போக்கில் தளர்த்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அனைத்து தொழில்துறைகளும் முழு வீச்சில் செயல்பட தொடங்கின. இதற்கிடையில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை கைப்பற்றியது.
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றார். பின்னர் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்தன. கொரோனா நிவாரணம், இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, இலவச கொரோனா சிகிச்சை என அடுத்தடுத்து முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி வாரியம் வெளியீடு!!
இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவித்தார். அதன்படி நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் மளிகை, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கானது மே 24ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 28 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கு உத்தரவை மே 31ம் தேதி வரை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால் மே 24ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் முழு ஊரடங்கை நீட்டிக்கும் நிலை வராது என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.