சென்னையில் முழு ஊரடங்கு எதிரொலி – வெறிச்சோடிய சாலைகள்!!
முழு ஊரடங்கு அறிவிப்பு இன்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை முக்கிய சாலைகள் அனைத்தும் காலியாக காணப்படுகிறது. இருப்பினும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிக வேகத்தில் பரவி வருகிறது. ஒரு நாளில் ஏற்படும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 25,000 க்கும் அதிகமாக உள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தினசரி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. மேலும், பாதிப்புகள் அதிகரித்த காரணத்தால் மே 6ம் தேதி முதல் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வுகளில் குளறுபடிகள் – உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!
தொற்றின் பாதிப்பு, கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால் தமிழகம் முழுவதும் மே 10ம் தேதியான இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணி வரை மட்டும் மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் மட்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டு, பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்று காலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் மூடி, பிரதான சாலைகளில் சோதனை சாவடிகளை அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்கள பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவசியமின்றி வெளியில் வருபவர்கள் மீறி அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.