நாளுக்கு நாள் எகிறும் பாதிப்பு – கொரோனா மையமாக மாறிய கல்வி நிறுவனங்கள் !

0
நாளுக்கு நாள் எகிறும் பாதிப்பு – கொரோனா மையமாக மாறிய கல்வி நிறுவனங்கள்! 

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பதால் உயர்கல்வி நிறுவனங்கள் கொரோனா மையங்களாக மாறியுள்ளது. சுகாதார துறை அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா மையம் :

கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணியானது அதிகரித்து வருகிறது.  மத்திய மாநில அரசுகள் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் நோய் பரவல் குறையவில்லை அதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

TN Job “FB  Group” Join Now

அதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை நிலவுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளும் போதுமானதாக இல்லை இந்தியாவில் நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க முடியாத அவல நிலை காணப்படுகிறது. இந்நிலைமையை சமாளிக்க சுகாதார துறை அதிக இடவசதி உள்ள உயர் கல்வி நிறுவனங்களை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மருத்துவ கல்லூரியில் நேரடி வகுப்புகளுக்கு தடை!!

இதன்படி பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், தனியார் மற்றும் அரசு கல்லூரிகள், போன்றவைகளை கொரோனா மையங்களாக மாற்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க சுகாதார துறை முடுவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் சுகாதாரத் துறை இம்முடிவை எடுத்துள்ளது. மேலும் பிற பகுதிகள் கொரோனா  கவனிப்பு மையங்களாகவும்  மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!