தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,971 பேருக்கு தொற்று!!
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டைப் போல் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,971 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்கள், தேர்தல் பிரச்சார கூட்டங்கள் போன்றவற்றில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் நாளை முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை – அதிகாரிகள் அறிவுறுத்தல்!!
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,75,190 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்து உள்ளதால், பலி எண்ணிக்கை 12,650 ஆக உயர்ந்துள்ளது. 1,971 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 8,51,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 2,44,686 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் 11,318 பேர் தற்போது கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.