தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – இன்று 1779 பேருக்கு தொற்று உறுதி!!
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,779 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நோய்த்தொற்று உறுதியான வீடு, தெருக்களில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 1,779 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,73,219 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1027 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 8,50,091 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்து உள்ளதால், பலி எண்ணிக்கை 12,641 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் நோய்த்தொற்றின் 2வது அலை பரவத் தொடங்கி உள்ளது உறுதியாகி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் பான் & ஆதார் கார்டு இணைப்பு – எளிய முறைகள் இதோ!!
கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு இதுவரை 2,43,954 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது 10,487 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்