தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா உறுதி – 463 பேர் பலி!!
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை 20,000க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19,448 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மட்டும் குறையாமல் உள்ளது.
கொரோனா நிலவரம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி அதிக எண்ணிக்கையிலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் புதிய உச்சம் அடைந்தது. அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து எடுத்த போதிலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் பரவியது. மக்கள் விதிமுறைகளை பின்பற்றாததால் தமிழகம் அதிக உயிரிழப்புகளை சந்தித்தது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த இந்த ஊரடங்கானது தளர்வில்லா ஊரடங்காக கடும் கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்கப்பட்டது. இந்த முழு பொது முடக்கத்தின் விளைவாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது. ஊரடங்கிற்கு முன் 35 ஆயிரத்திற்கு மேல் இருந்த ஒரு நாள் தொற்று எண்ணிக்கை ஊரடங்கிற்கு பின் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,60,385 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கோவையில் 2,564, ஈரோட்டில் 1,646, சென்னையில் 1,530 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – கடைகள், அலுவலகங்கள் திறக்க அனுமதி!!
புதிதாக தமிழகத்தில் 19,448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து தமிழகத்தில் இதுவரை 22,56,681 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை குறைந்த போதிலும் பலி எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 463 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 26,128 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக கடந்த 24 மணி நேரத்தில் 31,316 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 19,97,299 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,32,026 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.