தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா வேகமெடுக்கும் – மாநகராட்சி ஆணையர் தகவல்!!
தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா தொற்று தீவிரமடையும், அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று
கொரோனா பரவலின் இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சற்று அச்சமடைய வைக்கிறது. மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதையும் தாண்டி கொரோனா பாதிப்பு மக்களை பயமுறுத்தி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா காரணமாக இறப்பு ஏற்பட்டாலும், ஆக்சிஜன் குறைபாடு காரணமாக நோயாளிகள் இறக்கக்கூடிய அவல நிலையும் உருவாகியுள்ளது.
CSIR CECRI புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வட மாநிலங்களை விட தமிழகத்தில் நோய் பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் குறைவாக காணப்பட்டாலும் வரும் நாட்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை செயலாளரும் இதை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கொரோனா தொற்று பாதித்துள்ள 13% பேருக்கு போர்க்கால அடிப்படையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
சென்னையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர். தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் வீடுகளுக்கு சென்று கொடுக்கப்படுகிறது. உயிரிழப்புகளை தவிர்க்கவும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா தொற்று தீவிரமடையும். அதனால் மக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு பத்திரமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.