தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு – உயரும் பலி எண்ணிக்கை!
தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்ட பின் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை குறையாமல் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நோய்த்தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்று பரவலை தடுக்க அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்கிறது. தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளார். மே 10 முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 131 ஆக குறைந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் – 5 ஆயிரமாக குறைப்பு!
இந்த தொடர் தளர்வில்லா ஊரடங்கால் மாநிலத்தில் ஒரு நாள் பாதிப்பு 26 ஆயிரத்து 513 ஆக பதிவாகி உள்ளது. சிகிச்சையில் இருந்தவர்களில் 31 ஆயிரத்து 673 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 18 லட்சத்து 2,176 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். ஊரடங்கிற்கு முன் 35,000 ஆக இருந்த ஒரு நாள் தொற்று எண்ணிக்கை ஊரடங்கு காரணத்தால் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை கூறுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த கொரோனா பரவல் குறைந்த போதிலும் இறப்புகள் குறையவில்லை. சற்று அதிகரித்து 490 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலான மொத்த உயிரிழப்பு 24 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கோவையில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2 ஆயிரத்து 467 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 1,163 பேரும், திருப்பூர் 1,338 பேரும், சேலத்தில் 1,140 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,106 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.