தமிழகத்தில் ஊழியர்களுக்கு Work From Home – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
தமிழகத்தில் வேகமெடுத்து வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மீண்டும் Work from home வழங்க வாய்ப்புகள் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
Work From Home:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு முதல் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் அரசின் துரிதமான நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு வந்தனர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொரோனா பரவல் மறு பக்கம் தேர்தல் என தமிழகம் முழுவதும் ஒரு அசாதாரண நிலை உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்ட போது, “தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
தமிழக கல்லூரிகளில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி வழக்கு – உயர் நீதிமன்றம் விசாரணை!!
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கலாம். மக்கள் கொரோனா குறித்த அச்சம் இல்லாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். மேலும் அனைத்து நிறுவன ஊழியர்களும் Work From Home செய்ய பரிசீலனை செய்யலாம். தமிழக அரசு 50% ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய வைக்கும் முடிவை பரிசீலித்து வருகிறது. இனிமேல் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை” இவ்வாறு தெரிவித்தார்.
I Completed B. Com and Typing lowyer English